siruppiddy

வியாழன், 31 அக்டோபர், 2013

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம்.


இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகை தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுகள்

எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 13வது அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்த இந்தியா ஆற்றிய சேவைக்காக அந்த கடிதத்தில் விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இலங்கையின் வடக்கு மக்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு இருக்கும் என்று கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னரே விக்னேஸ்வரனின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திங்கள், 28 அக்டோபர், 2013

பிரதமருக்கும் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவிக்க திரண்ட தமிழர்கள்..



கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள்,

 தமது சக கனடிய உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்றம் முன் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் அணிதிரண்ட கனடியத் தமிழர்களின் படத்தொகுப்பு








 

சனி, 26 அக்டோபர், 2013

பொழிலன் பெரும் தமிழர் கூட்டத்தின் வாழ்த்து முழக்கத்துடன்


 இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை.

இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் 'பணிகள்' முடித்து இந்தியா திரும்பிய போது ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் இவ்வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தார். பத்து ஆண்டுகள் புழல் சிறையில் வாழும்

 தமிழர்களுக்கு தமிழ் தேச சிந்தனையை விதைத்து விட்டு .இந்திய ஆரிய வல்லாதிக்கத்தை தவிடு பொடியாக்கும் உறுதியோடு வெளிவந்தார்...
சாதி மதம் தகர்த்து தமிழ் தேச தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை சிறைக்கு வெளியே நின்ற மக்கள் திரளில் முழங்கினார்...

பொழிலன் தோழரின் குடும்பத்தினரும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து உரையாடியது நெகிழ்வான தருணம்தமிழ் தேச மக்கள் கட்சி தோழர் தமிழ் நேயன் செவ்வேள் பாவேந்தேன் பார்வேந்தன் தமிழ் மகன் தமிழர் நலம் பேரியக்கம் தோழர் மு.களஞ்சியம் வழக்குறைஞர் அங்கயற்கன்னி தாயார் அற்புதம் அம்மாள் வழக்குறைஞர் வடிவாம்பாள் தோழர் அதியமான்

தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் அருண்சோரி கலகத் தோழர்கள் அமலன் கீரா தமிழ்பாலன் முச்தாக் தமிழினியன் மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு தோழருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு புத்தர் கலைக்குழு மகிழினி மணிமாறன் தலைமையில் பறை அடித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தோழர்

மகேந்திரவர்மன் காவலர்களின் நெருக்கடிகளை கோப வார்த்தைகளால் தகர்த்து எறிந்தார் பின் அனைத்து தோழர்களும் பெரும் திரளாக அனுமதி மீறி ஊர்வலமாக வந்து புரட்சியாளர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க மரியாதை செலுத்தினர்.பின் பொழிலன் தோழரை சுமந்து கொண்டு வாகனம் தமிழ்க்களத்தை நோக்கி பயணித்தது

 

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து விழிப்புணர்வு நடவடிக்கை


சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்து அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதிபூணுவோம் என்ற மக்கள் விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு துண்டப்பிரசுரங்களை வழங்கியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்க்கொண்டனர்.

மேலும், சிறுவர்களது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை பாதிக்கும் அல்லது பாதிப்புக்கு இடமளிக்கும் எந்தவொரு நபரின் செயற்பாடுகள், மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தப்படல், என்பன சிறுவர் துஸ்பிரயோகமாகவே கருதப்படும். இத்தகைய சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 5 வருட கால சிறைதண்டனை வழங்கப்படும் என மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகளையும், மக்களையும்


போராளிகள் வருவார்களா? மௌனிக்கிறார். முன்னாள் போராளிகளையும், மக்களையும் காக்க புலம் பெயர் மக்களை அழைக்கும்: செல்வம் பா.உ
எமது போராளிகள் வருவார்களா போராட்டம் வெடிக்குமா மௌனத்துடன் தயகத்தில் முன்னால் போராளிகளையும் மக்களையும்

 காக்க புலம் பெயர் உறவுகள் இணைவது காலத்தின் கட்டாயம் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

லங்காசிறி வானொலியின் வாராந்த அரசியல் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழர் தாயகத்தின் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினையும் எம் இனத்தின் இன்றைய நிலையையும் வெளிப்படுத்துகிறார்.

ஈழத்தமிழர் வாழ்வின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் 'ராவண தேசம்'

 
அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார்.
இந்த படம் ஈழத்து மக்களது  அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில்,

போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது.
யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம் இருக்கிறது என்றார் படத்தின் இயக்குனர் தெரிவித்தார்.
 


 

சனி, 19 அக்டோபர், 2013

நிமலராஜன் மறைந்து 13 வருடங்கள் நிறைவு

 
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர்.

அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார்.

கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார்.

குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை, வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார்.

இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார்.

அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும்

ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை.
இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன.
வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது.

பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது.

இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு

கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார்.
இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு

அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார்.

தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது.

நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின்

பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின.
2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன.

கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது.
ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ்

நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர்.

பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர்.

நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும்.

நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு,13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் அதனை நினைவுக் கூறுவதும் கஸ்டமான நிலைமையாக மாறியுள்ளது. அவ்வாறு அவர்கள் நிமலராஜனை நினைவு கூர்ந்தாலும் அவரை கொன்றவர்களுடன் இணைந்தே நினைவு கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தலிபான்கள் சதி ஜேர்மன் தூதரகத்தை தாக்க!!


தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் அடிப்படையில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஜேர்மன்
 தூதரகத்தை தாக்கப் போவதாக தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் மார்ட்டின் சாபிர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.

மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்படும் என்றும், ஜேர்மன் மக்களை காப்பாற்றும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
 

இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற அகதி கைது


மட்டக்களப்பு,கல்லடி ஆராயம்பதியைச் சேர்ந்த சின்னத்துரை சுதாகரன் (வயது33) 2012ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து விசா மூலம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு செல்ல விசாக்காலம் 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்ததால் திரும்பிச் செல்ல முடியாமல் சென்னை காவந்திர அகதி முகாமில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார்.
இலங்கைக்கு படகு மூலம் செல்ல வியாழக்கிழமை காலையில்

இராமேஸ்வரம் தனுஷ்கோடி வந்துள்ளார். இவரை அப்பகுதியில் தமிழக கடலோர காவல் படை குழும காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதிபாஸ் தலைமையில் பொலிஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் இலங்கைக்கு படகுமூலம் செல்ல இருந்தது தெரியவந்ததால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 16 அக்டோபர், 2013

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம்


 
ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! - நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் Top News 
இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்

 பாடுபட்டு தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் தவைவர் பிரபாகரனின் முழு வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவரைப் பற்றிய முழு நூல் வெளிவரவேண்டும். இந்த நூலின் முதல் பதிப்பு 1888 இல் வெளிவந்தது. பின்னர் அதனை விரிவாக எழுதி 2012 மார்ச்சு மாதத்தில் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
   
மொத்தம் 90 அதிகாரங்களையும் 1,200 பக்கங்களையும் கொண்ட இந்த நூல் உள்ளடகத்தில் மட்டுமல்ல உருவத்திலும் கனதியான நூல். தலைவர் பிரபாகரனை இளமை முதல் நன்கு தெரிந்தவர் என்ற முறையிலும் தமிழீழத்தை மாதக் கணக்காகச் சுற்றிப் பார்த்தவர் என்ற முறையில் இந்த நூலை எழுதுவதற்கு நெடுமாறன் முழுத் தகைமை உடையவர். நான் நூலைப்பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த நூலை அன்பரசி, ஈழவேந்தன், இரா. குணநாதன் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழினத்தில் பிறக்கவில்லை. முத்தமிழ் அறிஞர் விசுவநாதம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பிரபாகரன் போல் ஒரு மாவீரன் பிறக்கவில்லை என்கிறார்.

தலைவர் பிரபாகரன் உலக அரங்கில் தமிழர்களுக்கு ஒரு முகவரியைத் தேடித் தந்தவர். ஒரு அடையாளத்தைத் தேடித்தந்தவர். தமிழர்களதைத் தெரியாதவர்களும் பிரபாகரனைத் தெரிந்திருக்கிறார்கள்" என்றார்.

தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சுந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இனிய இளைய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நக்கீரன் பேசுகையில்,

சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் 13 ஆவது நூற்றாண்டோடு மறைந்து போயின. அதன் பின்னர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 700 ஆண்டுகளுக்கு மேலாக துலுக்கர், தெலுங்கர், நாயக்கர்கள், மராத்தியர், ஆங்கிலேயர் ஆகிய இனத்தவரால் ஆளப்பட்டனர். யாழ்ப்பாண இரச்சியம் 1619 இல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் 329 ஆண்டுகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றாலும் தமிழர்கள்

 தொடர்ந்து சிங்களவர்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.இந்தப் பின்னணியில் தோன்றிய தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடி தமிழீழம் என்ற நிழல் அரசை உருவாக்கினார். இன்று அந்த அரசு இல்லாவிட்டாலும் அதன் கட்டுமானம் அசையாமல் இருக்கிறது.

விடுதலைப் போராட்டம் என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது. தந்தை செல்வநாயகம் அந்தத் தேரை மேற்கு வீதி மட்டும் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போய்விட்டார். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் தேரை வடக்கு வீதி மட்டும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இப்போது இருக்கும் தலைமுறை தேரை இருப்பிடத்துக்கு இழுத்து வரவேண்டும்.

தமிழினத்தில் வரலாற்றை நாம் ஒழுங்காக, சீராக, ஆண்டு வாரியாக எழுதவில்லை என்ற பெரும் குறை இருக்கிறது. தொல்காபியர், திருவள்ளுவர் போன்றவர்களது வாழ்க்கை வரலாறு தெரியாது இருக்கிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த கம்பர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் மட்டுமல்ல அவர் பிறந்த நூற்றாண்டும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் அரசர்களது வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண அரசர்களது ஆட்சி பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கவில்லை. எனவே பழ நெடுமாறன் எழுதிய நூல் தலைவர் பிரபாகரனது காலத்திலேயே எழுதப்பட்டது போற்றுதலுக்கு உரியது. இனிவரும் தலைமுறைகள் இந்த நூலைப் படித்தபுப் பயன் பெற வேண்டும். நீங்கள் ஒவ்வொருவதும் இந்த நூலின் இரண்டு படிகளை வாங்க வேண்டும்.

 ஒன்று உங்களுக்கு மற்றது உங்கள் நண்பருக்கு" எனக் கூறினார்.
தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்தவர்களை தமிழ்ப் படைப்பாளிகள் கழக செயலாளர் முருகேசர் தியாலிங்கம் வரவேற்று உரையாற்றினார்.
நூலாசிரியர் பழ நெடுமாறன் அனுப்பி வைத்த வாழ்துச் செய்தியை ஆசிரியர் சின்னத்துரை துரைராசா படித்தார்.

நூலின் முதல் 30 அதிகாரங்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்திய அன்பரசி பேசும் போது " "தொடக்க காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும் எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும் வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும் கெரில்லாப் போராட்டத் தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு

அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது அய்யத்திற்கிடமற்றது.
வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார். (முழு உரை பின்னர் வரும்)

அடுத்து நூலின் பாடுபொருளாக விளங்கும் தலைவர் பிரபாகரனையும் நூலாசிரியர் நெடுமாறனையும் நன்கு தெரிந்த திரு மா.க. ஈழவேந்தன் உரையாற்றினார்.

"1987 யூலை 29 ஆம் நாள் இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்திட்ட போது நான் தமிழ்நாட்டில் இருந்தேன். அந்த உடன்படிக்கையைப் படித்துவிட்டு அதனைக் கண்டித்து இது தமிழ்மக்களை ஒழிக்க இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளின் கூட்டுச் சதி என அறிக்கை விட்டேன். உடனே இந்திய உளவுத்துறையினர் என் வீட்டுக்கு வந்து எப்படி ஒரு அகதியாக

இருக்கும் நான் இந்தியப் பிரதமர் செய்து கொண்ட உடன்படிக்கையை கண்டித்து அறிக்கைவிடலாம் எனக் கேட்டார்கள். அதற்கு நான் இந்த உடன்படிக்கை வட - கிழக்கு தமிழ்மக்களது தாயகம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. அது எமக்குத் தெம்பு தருகிறது. ஆனால் இந்தியா வட கிழக்கில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டோம். என்னிடம் இருந்து ஒரு நீண்ட வாக்கு மூலத்தை வாங்கிக்கொண்டு போனார்கள். போனவர்கள் போனவர்கள்தான். சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பது பற்றி ஒன்றுமே நடக்கவில்லை.

அடுத்துப் பேசிய இரா குணநாதன் தான் சமாதான காலத்தில் வன்னி சென்றிருந்த போது பல படைத்தளபதிகளைச் சந்தித்து அளாவியதை நினைவு கூர்ந்தார். முக்கியமாக இராணுவத்தின் கோட்டையாக இருந்த ஆனையிறவைப் பிடித்த தளபதி பால்ராஜ் அவர்களை தானும் தனது நண்பர்

ஒருவரும் சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார். தாங்கள் தளபதி பால்ராஜை சந்தித்த போது அவர் ஒரு பாயில் உட்கார்ந்திருந்தார். ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவரோடு பேசினோம். ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் திட்டத்தை தலைவர் பிரபாகரன் மிகவும் மதி நுட்பத்தோடு வரைந்திருந்தார்.

அதனை தான் உட்பட தளபதி தீபன், தளபதி பானு அவர்கள் மற்றும் படைத்தளபதிகளுக்கு விளக்கினார். "நீங்கள் குடாரப்பில் தரையிறக்கப்படுவீர்கள். குடாரப்பை ஊடறுத்து புலாப்பளையைத் தாண்டி

எழுதுமட்டுவாளை நோக்கி ஊடறுத்து தாக்குதல் நடைபெற வேண்டும்" என்றார். அப்போது நான் இராணுவத்தில் 20,000 இராணுவத்தினரைக் கொண்ட இரண்டு படை அணிகள் இருப்பதைக் குறிப்பிட்டேன். அதற்குத் தலைவர் "20,000 ஆயிரம் என்ன 40,000 இராணுவத்தினர் இருந்தால் என்ன இங்கேதான் போர் நடக்கும். அதன் பின் நீங்கள் வருவதாயிருந்தால் ஏ9 பாதை ஊடாகத்தான் வரவேண்டும்" என்றார்.

தளபதி பால்ராஜ் தலைமையில் புலிகளது படையணிகள் குடாரப்பில் தரையிறக்கம் செய்யப்பட்டன. இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இறக்க தாக்குதலில் மிகப் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர். தளபதி பால்ராஜ் தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி வரலாற்றுப் புகழ் பெற்ற வெற்றியை ஈட்டித் தலைவர் சொன்னது போல ஏ9 பாதை வழியே அவரும் எஞ்சிய அவரது போராளிகளும் திரும்பினார்கள்.

போரின் இறுதி நாட்களில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் வன்னியில் மேற்கொண்ட நிவாரணப் பணியை விளக்கியபோது போர்க்களத்தில் சிக்குண்ட 300,000 மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்ற முழங்காவில் வீடுகட்டும் திட்டத்திற்கு தம்பி செந்தில் மூலம் சேகரித்து வைத்திருந்த 5 இலட்சம் டொலர்களைத் வேறு வழியின்றி அந்த மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொழும்பில் வாங்கி லொறிகளில் கொண்டு சென்று கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை திரு கந்தையா இராஜகுலசிங்கம் வெளியிட்டு வைக்க அதன் முதற் படிகளை நிமால் வினாயகமூர்த்தியும் திரு கார்த்திகேசு சிவசேகரனும் பெற்றுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் வரிசையில் வந்து நூலை வாங்கினார்கள்.
 

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும் -


கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும்

இருக்கக்கூடாதென்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான விசேட பூஜை வழிபாடொன்று நேற்று கொழும்பு கொச்சிக்கடை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
   
இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பூஜையின் பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியில் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்க் கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய மக்கள் கூட்டமைப்பாகும். இதில் தமிழரசுக் கட்சியும் ஒரு கூட்டுக்கட்சியாகவே நாம் கருதுகின்றோம். தமிழரசுக்கட்சி தனித்து

செயற்படுகின்றது என்ற கூற்றினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வட மாகாண சபையினை பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம்.

இதன் காரணத்தினாலேயே அண்மைக்காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. எனினும் இன்று எமது கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு எம்மை அரசாங்கம் அழைத்திருப்பதற்கான தாற்பரியம் என்ன என்பது எம்மால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாம் கலந்துகொள்வது தொடர்பில் எமது கட்சியில் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பிலான முடிவுகளை எடுக்க முடியும்.

வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை. ஆகவே, முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வடமாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

கடந்த காலத்தில் முஸ்லிம் தலைமைகள் அம்மக்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திலிருந்தனர். அச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளையும் சர்வதேசம் வரை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன் காரணத்தினால் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து அனைவருக்குமான நல்லதொரு ஆட்சியினை வடக்கு மற்றும் கிழக்கில் அமைத்து அவர்களை பாதுகாப்போம் என அவர் குறிப்பிட்டார்.
 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இறுதிக் போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு

 
இறுதிக் கட்ட போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலங்கை அரச இராணுவத்திற்கு உதவியுள்ளனர்.
பிரிட்டனின் PSNI என்னும் வடஅயர்லாந்து பொலிஸ் பிரிவினர் இவ்வாறு உதவியுள்ளனர்.

இறுதிக் கட்ட போரின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானிய இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் 3500 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

 
தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: வைகோ வேண்டுகோள்-
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 14வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து சென்னை அரசு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று பேசிய வைகோ, தியாகுவின் உயிர் இந்த நாட்டுக்கு அவசியம் என்றும், அவர் போராட்டத்தை வேறு வகையில் கையில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

14 நாட்களாக இந்த உண்ணா விரதப் போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர்
மு கருணாநிதிக்கு.


 கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக் கொண்டார்.
இந்தியா முற்றிலும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் வரை வேறுவகையில் போராட்டம் தொடரும் என்று கூறினார் தோழர் தியாகு. தமிழக மக்கள் இனி வெவ்வேறு வகையில் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும் என அவர்  பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.

சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.

இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்

ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவி}ன் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.{ காணொளி




 




 
 

திங்கள், 14 அக்டோபர், 2013

முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு


மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது.

வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­  தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை.

இதில் மாத இறுதி அமர்வில் மாத்திரமே மாகாண முதல்வர்கள் கலந்துகொள்வார்கள்.
மாகாண அபிவிருத்தித் திட்டப் பொறிமுறைகள், மாகாண விடயதானங்கள் குறித்தான சட்டமூலங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்பதுடன் முதல்வர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.

குறிப்பாக இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, அரசின் திட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முதலமைச்சர்கள் எடுப்பார்கள்.
எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இம்முறையே

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.
மாகாண சபை சம்பந்தமான பிரேரணைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும்போது, அது மாகாண நிர்வாகத்துக்கு பாதகமாக இருந்தால் அதற்கு எதிராக முதல்வரால் கருத்து வெளியிடமுடியும்.

அத்துடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளு மாறும் அவரால் கோரிக்கை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீங்கான் கோப்பை: ரூ.110 கோடிக்கு விற்பனை


சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில், 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டின், சாங்க்வா காலத்தில், சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன. பீங்கானால் செய்யப்பட்ட, சிறிய, அழகான, இந்த 'மிங்' கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார். ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள்
வந்திருந்தனர். இந்த 'மிங்' கிண்ணத்தை, ஹாங்காங்கைச் சேர்ந்த, சீன மண்பாண்ட டீலரான வில்லியம் செக் என்பவர் வாங்கியுள்ளதாக, இதன் நிறுவனர் நிகோலஸ் சாவூ கூறியுள்ளார்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அபாயம் அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் ??


கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
 
நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

  இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீர்கள். சாதாரண நிலையில் நாடு இல்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இது அனைவரையும் பாதிக்கும்.
  
இதற்கு குடியரசுக் கட்சியினர் தான் காரணம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்படும், வர்த்தகம் தடைப்படும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும், பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாது. இதனால் அரசு செலுத்த வேண்டிய தவணைத்

தொகையைச் செலுத்த முடியாமல், கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் அமெரிக்கா இடம் பெறும். இதன் மூலம் நாட்டின் நம்பகத்தன்மை குலைந்துவிடும்.
 
முதலில் அமெரிக்க வரவு செலவு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடன் உச்சவரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் முடங்கும் என்றார் ஒபாமா.
 

மக்களை ஏமாற்றிவிட்டு அடிபணிவுக்குத் தயாராகும் கூட்டமைப்பு -


வடக்கு மாகாணசபை தமிழர்களுக்கு வரமா? சாபமா? என்ற எண்ணத்தைத் தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கின்றது. வேட்பாளர் தெரிவில், அமைச்சர் தெரிவில், சத்தியப் பிரமாணம் எடுத்தல் தொடர்பில் என நீண்ட உட் சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்களித்த மக்களின் கனவுகளில் வாய்க்கரிசி இடவே கூட்டமைப்பு இப்போதும் சித்தமாய் இருக்கிறது.

ஆம், தமிழ் மக்கள் அனைவருடைய மனங்களையும் இப்போது உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடையம், அறியாமலா அல்லது வேறு வழியின்றி மிகப் பெரிய பிழை ஒன்றை விட்டுவிட்டோமோ என்பதுதான். இது பிழையா அல்லது வரலாற்றில் அழிக்க முடியாத தவறொன்றை அனைத்து தமிழ் மக்களும் இணைந்து சொய்துவிட்டோமா என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.
தமிழ் மக்களுடைய மனக்குமுறலுக்கு காரணம் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை

வெற்றிபெறவைத்துவிட்டோமோ என்பது தான். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகில் பல நாடுகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் திட்டத்துடன் மழுங்கடித்ததும், அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த மனிதத்துவம் இல்லாத சிறீலங்கா அரசாங்கத்தினை சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மூலம் நீதிக்கு முன் நிறுத்தி சட்டப்படி தண்டணை பெற்றுக்

கொடுப்பதற்கு எமது கைகளைப் பலப்படுத்துங்கள் என்று தமது பிரதானமான வாசகமாகக் கூறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது போர்க்குற்றவாளி மகிந்தவின் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று வடக்குமாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதும், தான் 7ம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் வடக்குமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தினை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் செய்து

கொள்ளவுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
சிறீலங்கவின் சட்ட விதிகளின்படி மாகாண முதலமைச்சர் முதல் உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வரைக்கும்

சாதாரணமான சமாதான நீதவான்கள் முன்னிலையிலேயே தமது பதவிப் பிரமாணங்களைச் செய்து கொள்ளலாம். முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த முதலமைச்சருக்கு இது தெரியாத விடையமாக இருக்காது. ஆனாலும் அவர் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் தனது பதவிப் பிரணமானத்தினை செய்யவுள்ளது, சர்வதேச மட்டத்தில் தற்போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள அழுத்தத்தின் வலுவைக் குறைத்துக் கொள்வதற்கே.

மிக நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது என்றால் அதற்கு காரணம் சர்வதேசத்தினால் சிறீலங்காவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே. இந்த சர்வதேச அழுத்தம் சிறீலங்கா அரசு மீது பிரயோகிப்பதற்கு முழுக்காரணமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த புனித மாவீரர்கள் மற்றும் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களுடைய தியாகம் என்பதை யாரும் மறுக்கவும் மறந்துவிடவும் கூடாது.

அந்த தியாகங்களும் அவர்களுடைய வீரங்களும் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும். எமது முன்னோர்கள் எவ்வாறு இருந்தார்கள், அவர்களுடைய இலட்சியவேட்கை என்ன என்பதை எதிர்காலத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் இப்போது இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களுடைய இருப்புக்கள், அடையாளங்கள், வரலாற்று பதிவிடங்கள் என்று எல்லவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் அடியோடு

அழித்து வருகின்றது. இச் செயற்பாடு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பிற்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்ந்த நிலக்கீழ் வீடு

இடித்துத் தரமட்டமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று விசுவமடுப் பகுதியில் இருந்த வீடும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியினைக் கொண்டாடிய பொது மக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆதரவு தெரிவித்த பொது மக்கள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் கந்தசாமி ரவிச்சந்திரன் (வயது 47) என்பவர் சிறீலங்கா இராணுவத்தினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும் கண்ணகிபுரத்தில் சபாரட்ணம் தயாபரன் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் அவரது ஒரு உழவு இயந்திரமும் தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளது. புதுமுறிப்பு கண்டாவளைப் பகுதியில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி அமைப்பாளர் அசோக்குமார் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அனலைதீவு சென்ற வடக்குமாகாணசபை உறுப்பினர் கஜதீபனின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று யாழ்.தீவகப் பகுதியில் குறிப்பாக ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியால் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட மறுப்புத் தெரிவித்த அதிபர்கள், ஆசிரியர்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் இடமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ்வாறான ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பொது மக்கள் மற்றும் கட்சி ஆதவாளர்கள் கிடைக்கப் பெற்றுள்ள மாகாண சபையினுடாக நேரடியான நிதி உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், முதல்வர் விக்கினேஸ்வரன் நினைப்பது போன்று இந்த நிதிகளை நேரடியாக கையாள முடியாது. மாகாண சபைக்கு வெளிநாட்டு முதலீடுகளையோ அல்லது வெளிநாட்டுக் கடன்களையோ நேரடியாக கையாளும் அதிகாரம் எதுவுமில்லை. அவ்வாறான நிலையில்

முதலமைச்சரின் கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படும்? சிறீலங்காவுக்கு வரும் அனைத்து நிதியங்களும் திரைசேரினுடாகத்தான் வெளிப்பாச்சப்படும். அவ்வாறான நிலையில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளே அதிகமாக இருக்கும் என்பதை ஐயா விக்கினேஸ்வரன் அறியவில்லையா?... அல்லது நடிப்பா?...
தமிழர்களின் இறையாண்மையைப் பெற்றுக் கொண்டால் அதனுடாக அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதுதான் மக்களின் உறுதிப்பாடு. அதற்காகவே, மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். வீதி புனரமைப்பையும், ஒரு சிலருக்கு தண்ணீர் இறைக்கும் பம்புகளையும் வழங்கிவிட்டு

அபிவிருத்தி செய்வதாக தெரிவித்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு மக்கள் கொடுத்த பாடத்தை, அடுத்துவரும் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்திக்க வேண்டிவரும் என்பதை கூட்டமைப்பிலுள்ள அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, மக்கள் இன்று சலுகைக்காக இல்லை, உரிமைக்காகத்தான் வாக்களித்தா£ர்கள் என்பதை கூட்டமைப்பு அரசியல்வாதிகள் உணர்ந்து மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாகவுள்ளது.

நீதி தவறிய நீதியரசர் விக்னேஸ்வரன் : அதிரவைக்கும்


வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கின்ற நிலையில் தற்போது வட மகான சபைக்கான

செயலாளர்கள் நியமனம் தொடர்பில் சிவி விக்னேஸ்வரன் தனது கொழும்பு வாழ் உறவினர்களையும் அரச விசுவாசிகளாக அறியப்பட்டவர்களையும் சிபார்சு செய்திருப்பது மேலும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் அமைச்சர்களான ஜி எல் பீரிஸ், ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரது நெருங்கிய நண்பருமான ரத்மலான இந்து கல்லூரியின் சர்ச்சைக்குரிய முன்னால் அதிபரான மன்மதராஜன் சிவி விக்னேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் சிவி விக்னேஸ்வரனுக்கு மச்சான் முறையானவர். யாழ் மாவட்டத்த்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2011 ஆம் அண்டு நடைபெற்ற போது அமைச்சர் ஜிஎல் பீரிசுடன் இவர் யாழ்ப்பாணம் சென்று யாழ் கச்சேரி முன்பாகவுள்ள அரச கட்டடத்தில் பல வாரங்கள் தங்கி நின்ற

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக பிரசாரம் செய்திருந்தார். அத்துடன் ரத்மலான இந்து கல்லூரியில் இவர் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற போது தகைமைகள் எதுவும் அற்ற தனது மனைவியை அதிபராக ஆக்குவதற்கு இவர் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் கடந்த வருடம் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இதேவேளை, மற்றொரு நெருங்கிய உறவினரான நிமலன் கார்த்திகேயனையும் சிவி விக்னேஸ்வரன் செயலாளர்களில் ஒருவராக நியமித்திருக்கிறார். இவர் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஊழல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்பட வேண்டும் எனக் கூறியுள்ள விக்னேஸ்வரன், சுமார் பத்து துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமாணிக்கபிள்ளையார்பாடல்

இந்த கிராமத்து இணையம் மிக விரைவில் மலரும் மிழிரும்

www.nilavarai.com