siruppiddy

வியாழன், 22 மே, 2014

யுத்தத்தின்போது 18500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்::


இலங்கையில் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் 18,500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில்,
ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
http://www.pcicmp.lk/ என்ற இந்த இணையத்தளத்தில் மூன்று மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், முறைப்பாடுகளையும் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அதற்கான படிவங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
 
 
.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com