siruppiddy

வெள்ளி, 28 நவம்பர், 2014

பாராளுமன்றில் மாவீரரை நினைவுகூர்ந்த எம்.பி.ராதிகா

 தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியுள்ளார்.

கனடியத் தமிழர்களின் வரலாற்றில் அவர்கள் நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவார்கள்.

ரிமம்பரன்ஸ் டே எனப்படும் இறந்த கனடியப் படைவீரர்களை நினைவுகொள்ளும் நாளும் தமிழ் மாவீரர்களின் நாளுமே அதுவாகும் என கனடியப் பராளுமன்றத்தில் இராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்தார்.

கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தொடர்ந்து பேசுகையில், தங்களது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதானால் நவம்பர் மாதம் வாழ்வியலின் அழகை வெளிக்கொணரும் ஒரு மாதமாக திகழ்கிறது.

யுத்தத்தில் இறந்தவர்களை மாத்திரமல்ல, யுத்தத்தில் அகப்பட்டு இறந்த சகல வயதுடைய பொதுமக்களையும் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்தவர்களையும் கொண்டாடுகிறோம்.

ஈழத்திருநாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளால் போரின் போதான ஒரு சிறுமியாகவே நான் பிறந்தேன். வன்முறைகளும் இனங்களுக்கிடையேயான பிரிவும், மத வேறுபாடுகளும் இன்னமும் அந்த நாட்டில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என இராதிகா மேலும் தனதுரையில் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com