siruppiddy

புதன், 26 நவம்பர், 2014

தலைவனே பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !

   60 வது அகவை காணும் தலைவனே உலகம் உன் வரவுக்காய் காத்து நிற்கிறது தலைவா!
உணர்வுத் தமிழர் துயரம் துடைக்க வா தலைவா!
புலம்பெயர் தமிழர் கல்வியை வளமாக்கிய தலைவா!

புதியதோர் வழி காட்டு, எமது இன எழுச்சிக்காய்
சூரியப் புதல்வரே! தமிழருக்கு சுதந்திரம் பெறவந்த தேவனே!
சூரியக் காலத்தில் நாம் ஈழம் பெறுவது உறுதி.

உயிர் பிரியும் முன் உங்கள் விழிகளைக் காண்போம்!
உறுதி எடுத்துத் தான் நாம் தேசப்பற்றோடு வாழ்கிறோம்!
உங்கள் அகவை அறுபது தமிழருக்கு விடிவுக்காலம் ஆகட்டும்!
உணர்வுத் தமிழினம் ஓர் அணியாய் உங்கள் பாதம் தொடரட்டும்!
பாரெங்கும் வாழும் தமிழர் உங்கள் பெயர் சொல்லிப்பாட
பல்லாண்டு வாழ வேண்டுமென நாம் வாழ்த்தி நிற்கிறோம்!

உலகிலுள்ள மற்றய இனத்தவர்கள் போல ஈழத்தமிழினமும் சுதந்திரம் பெற்ற இனமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தமிழினம் விடுதலை பெற எந்த ஒரு நாட்டின் உதவியுமின்றி சொந்த மக்களின் பங்களிப்புடன், ஒரு நாட்டிற்கு தேவையான சகல உட்கட்டுமானங்களுடனும், தரை,கடல்,ஆகாயப்படைகளை அமைத்து வீரமுடன் அடக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராடி, உலகின் ஒரு மூலையிலே முடக்கப்பட்டுக்கிடந்த தமிழர்களை ‘நாம் ஈழத்தமிழர்’ என்று நெஞ்சை நிமிர்த்தி தலை நிமிர்ந்து நடக்க வைத்த எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கட்கு டென்மார்க் கலை பண்பாட்டுக் கழகம் 60ம் ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது, 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com