siruppiddy

புதன், 12 மார்ச், 2014

இந்தியாவிற்கு விஜயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை இந்தியா இன்னமும் அறிவிக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானம் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com