siruppiddy

வியாழன், 5 டிசம்பர், 2013

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக தவராசா?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராசா நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது. நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்

வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற கருதப்படுகிறது.
   
இந்தச் சூழலில் இவருக்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாணசபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com