siruppiddy

புதன், 27 நவம்பர், 2013

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர்களின் நினைவாக மரம் நாட்டிய ஐங்கரநேசன்.


மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்ட வேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டது. இந்தபோதும் அவர் மன்னாரில் நேற்று மரங்களை நாட்டினார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மரங்களை நாட்டுவதை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தும் அவ்வாறு நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் அவரது நினைவாகவும் மரங்களை நடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலை நிறைவு செய்து உரையாற்றிய அமைச்சர், 'மரணித்தவர்கள் நினைவாக மரங்களை நடுவது குற்றமாகாது, இங்கு தங்கள் பிள்ளைகளைப் போரில் இழந்த ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்கள் துயரை ஆற்றுவதற்கு இந்த அரசு தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எல்லோரும் வீடுகளில் அவர்களது நினைவாக உயிருள்ள ஜீவ சமாதிகளாக மரங்களை நடுவோம்' என்றும் குறிப்பிட்டார். இதன் பின்னர் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து, மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.






 



சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்


 சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள் 
தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 59வது அகவை தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபூர்க் போறூம் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவைநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழின உணர்வாளர் ஓவியர் திரு.வீரசந்தானம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு இன்று ஆரம்பமாகும் தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்டு எமது தேசத்தின் வீரப் புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

                            





 

திங்கள், 11 நவம்பர், 2013

தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் மாநாடு:


 
தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது. இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசியர் ராமசாமி மற்றும் பல அரசியல்

ஆய்வாளர்கள் ,தமிழ்த் தேசிய ஊடகவியாளர்கள் , தமிழீழ ஆதரவாளர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் . அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக கனடாவில் இருந்து மோகன் ராமகிரிஷ்ணன் , பிரான்சில் இருந்து திரு திருட்சோதி , நோர்வேயில் இருந்து ஸ்.டீவன் புஷ்பராஜா ஆகியோர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள்.










வியாழன், 7 நவம்பர், 2013

வெலிஓயா பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை


குடியேற்ற இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனால் வெலிஓயா முற்றுமுழுதாக சிங்கள மயமாகும் பேராபத்தை நோக்கியுள்ளது என பெயர் குறிப்பிடாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில்,

அனுராதாபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களையும் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் , கருணாட்டுக்கேணி, ஆகிய மூன்று தமிழ் கிராமங்களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது.

வன்னி யுத்தத்தின் பின் இப்பிரதேசம் முற்று முழுதாக இராணுவ மயமாக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் தீவிர முயற்சியில் இராணுவம் செயற்பட்டு வருகின்றது. இந்த திட்டத்துக்கு இராணுவ நிதி

பயன்படுத்தப்படுவதுடன் சிங்கள செல்வந்தர்களும் உதவி வருகின்றனர்.
ஏற்கெனவே இச்செயலாளர் பிரிவில் 11,000 மக்கள் குடியிருந்து வருகின்றார்கள் பெரும்பான்மை சமூகத்தை குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசத்தில் இன்னும் சில கிராமங்களை இணைத்து சிங்கள பிரதிநிதி ஒருவர் வரக்கூடிய தேர்தல் தொகுதியொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டமென்றும், இங்கு

குடியேற்றுவதற்காக,பண்டாரவளை, மொனராகலை, அநுராதபுரம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தினர் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்படுகிறார்கள்.
இதனால் வெலிஓயா கிராமம் சிங்கள மயமாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

படப்பிடிப்பு கருவிகள் பறிப்பு; வலி.வடக்கில் இராணுவ..


வலி.வடக்கிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களது படப்பிடிப்புக் கருவிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டதுடன் படங்களும் அழிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை , நகரசபை உறுப்பினர்களும்

 நேரடியாக சென்றிருந்தனர்.
அங்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த இடத்திற்கு வந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் இவர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இதனைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் இராணுவ அதிகாரியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் அவர்களது படப்படிப்பு கருவிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டு அதில் இருந்த படங்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் 'உங்கள் எல்லோரையும்

 எமக்கு நன்றாகத்தெரியும் நாளைய தினம் பத்திரிகையில் படங்கள்  வெளியிடப்பட்டிருந்தால் பின்னர் என்ன நடக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்' என குறித்த அதிகாரி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை  குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது

   இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் எட்மில்லிபாண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையை எட் மில்லிபாண்ட் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், கடந்த காலக் குற்றங்களுக்கு இன்னமும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லையென்பதையும் பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

"இலங்கையில் நல்லிணக்கம்' என்ற அறிக்கை ஒன்றையும் எட் மில்லிபாண்டிடம் சமர்பித்துள்ளனர் பிரிட்டன் தமிழர் பேரவையினர். இந்த அறிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், காணி சுவீகரிப்பு குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பார்வையிட்ட மில்லிபாண்ட் அதிர்ச்சியடைந்ததாகவும் பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சனி, 2 நவம்பர், 2013

கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் -



எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழ தேசியத்துக்காய் தம் உயிர்ஈத்த மாவீரர்களின் மாபெரும் வணக்க நிகழ்வு கனடா ரொறன்ரோவில் இடம்பெறவுள்ளதை அனைத்துலக தமிழ்

 உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்….

www.nilavarai.com