siruppiddy

வியாழன், 7 நவம்பர், 2013

வெலிஓயா பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை


குடியேற்ற இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனால் வெலிஓயா முற்றுமுழுதாக சிங்கள மயமாகும் பேராபத்தை நோக்கியுள்ளது என பெயர் குறிப்பிடாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில்,

அனுராதாபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களையும் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் , கருணாட்டுக்கேணி, ஆகிய மூன்று தமிழ் கிராமங்களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது.

வன்னி யுத்தத்தின் பின் இப்பிரதேசம் முற்று முழுதாக இராணுவ மயமாக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் தீவிர முயற்சியில் இராணுவம் செயற்பட்டு வருகின்றது. இந்த திட்டத்துக்கு இராணுவ நிதி

பயன்படுத்தப்படுவதுடன் சிங்கள செல்வந்தர்களும் உதவி வருகின்றனர்.
ஏற்கெனவே இச்செயலாளர் பிரிவில் 11,000 மக்கள் குடியிருந்து வருகின்றார்கள் பெரும்பான்மை சமூகத்தை குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசத்தில் இன்னும் சில கிராமங்களை இணைத்து சிங்கள பிரதிநிதி ஒருவர் வரக்கூடிய தேர்தல் தொகுதியொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டமென்றும், இங்கு

குடியேற்றுவதற்காக,பண்டாரவளை, மொனராகலை, அநுராதபுரம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தினர் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்படுகிறார்கள்.
இதனால் வெலிஓயா கிராமம் சிங்கள மயமாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com