siruppiddy

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பிரிட்டன் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது

   இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் எட்மில்லிபாண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையை எட் மில்லிபாண்ட் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், கடந்த காலக் குற்றங்களுக்கு இன்னமும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லையென்பதையும் பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

"இலங்கையில் நல்லிணக்கம்' என்ற அறிக்கை ஒன்றையும் எட் மில்லிபாண்டிடம் சமர்பித்துள்ளனர் பிரிட்டன் தமிழர் பேரவையினர். இந்த அறிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், காணி சுவீகரிப்பு குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பார்வையிட்ட மில்லிபாண்ட் அதிர்ச்சியடைந்ததாகவும் பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com