siruppiddy

ஞாயிறு, 3 நவம்பர், 2013

படப்பிடிப்பு கருவிகள் பறிப்பு; வலி.வடக்கில் இராணுவ..


வலி.வடக்கிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களது படப்பிடிப்புக் கருவிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டதுடன் படங்களும் அழிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை , நகரசபை உறுப்பினர்களும்

 நேரடியாக சென்றிருந்தனர்.
அங்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த இடத்திற்கு வந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் இவர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இதனைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் இராணுவ அதிகாரியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் அவர்களது படப்படிப்பு கருவிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டு அதில் இருந்த படங்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் 'உங்கள் எல்லோரையும்

 எமக்கு நன்றாகத்தெரியும் நாளைய தினம் பத்திரிகையில் படங்கள்  வெளியிடப்பட்டிருந்தால் பின்னர் என்ன நடக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்' என குறித்த அதிகாரி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை  குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com