siruppiddy

வியாழன், 16 ஜனவரி, 2014

சிறைச்சாலையில் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெண் சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி சோதனையிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இவ்வாறு கடுமையாக சோதனை இடுவதன் மூலம் கைதிகளின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண் கைதிகள் மட்டுமன்றி சிறுவர் சிறுமியரும் இவ்வாறு நிர்வாணமாக்கி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சந்தேகம் ஏற்பட்டால் வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி சோதனையிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கைதிகளை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்படும் போது இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com