siruppiddy

புதன், 27 நவம்பர், 2013

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர்களின் நினைவாக மரம் நாட்டிய ஐங்கரநேசன்.

மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்ட வேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டது. இந்தபோதும் அவர் மன்னாரில் நேற்று மரங்களை நாட்டினார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த...

சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்

 சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்  தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 59வது அகவை தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில்...

திங்கள், 11 நவம்பர், 2013

தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் மாநாடு:

  தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது. இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட...

வியாழன், 7 நவம்பர், 2013

வெலிஓயா பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை

குடியேற்ற இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் வெலிஓயா முற்றுமுழுதாக சிங்கள மயமாகும் பேராபத்தை நோக்கியுள்ளது என பெயர் குறிப்பிடாத அதிகாரியொருவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில், அனுராதாபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களையும் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் , கருணாட்டுக்கேணி, ஆகிய மூன்று தமிழ் கிராமங்களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது. வன்னி யுத்தத்தின் பின்...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

படப்பிடிப்பு கருவிகள் பறிப்பு; வலி.வடக்கில் இராணுவ..

வலி.வடக்கிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களது படப்பிடிப்புக் கருவிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டதுடன் படங்களும் அழிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை , நகரசபை உறுப்பினர்களும்  நேரடியாக சென்றிருந்தனர். அங்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த...

பிரிட்டன் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது

   இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் எட்மில்லிபாண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையை எட் மில்லிபாண்ட் முன்வைத்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன்,...

சனி, 2 நவம்பர், 2013

கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் -

எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழ தேசியத்துக்காய் தம் உயிர்ஈத்த மாவீரர்களின் மாபெரும் வணக்க நிகழ்வு கனடா ரொறன்ரோவில் இடம்பெறவுள்ளதை அனைத்துலக தமிழ்  உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்...

www.nilavarai.com