siruppiddy

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் மீள வலியுறுத்து

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் மீளவும் வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வெளிவிவகார பொதுநலவாயத்துறை அமைசர் ஸுவைவர்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.  அங்கு நடந்தேறிய போர்க் குற்றம் தொடர்பாக வெளிப் படை யான விசாரணை தேவை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வை, பிரிட்டன் பிர தமர் டேவிட் கமரூன் வலியுறுத்தி உள்ளார். இதையே பிரிட்டன் முழுமையாக விரும்புகின்றது. இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய செயல்பாடாக சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது.

பிரதமர் டேவிட் கமரூன் முன்னரே குறிப்பிட்டதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வெளிப்படையான விசாரணை தொடங்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்த பிரிட்டன் முயற்சி எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com