siruppiddy

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தனி ஈழ வாக்குறுதி ஜெயாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்


இலங்கையில் தனி ஈழம் அமைக்க இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவினால் இன்று (25) வெளியிடப்பட்டது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையில் வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று அந்த விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com