siruppiddy

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு பொருத்தமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்படவே\ண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசும் அது அமைத்த நல்லிணக்க ஆணையமும், இந்த குற்றச்சாட்டுகளை சரியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்றும் அது கூறுகிறது.
ஆனால் இந்த அறிக்கை இலங்கைக்கு எதிரான ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட, காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்ட நிரலை பிரதிபலிப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.
இந்த அறிக்கை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com