siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

அடிபணிந்து உரிமைகளைப் பெற தயாராக இல்லை!

  அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவையில் இன்று காலை 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பித்து அறிமுகவுரை ஆற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், 2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும்,...

வெள்ளி, 28 நவம்பர், 2014

பாராளுமன்றில் மாவீரரை நினைவுகூர்ந்த எம்.பி.ராதிகா

 தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியுள்ளார். கனடியத் தமிழர்களின் வரலாற்றில் அவர்கள் நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவார்கள். ரிமம்பரன்ஸ் டே எனப்படும் இறந்த கனடியப் படைவீரர்களை நினைவுகொள்ளும் நாளும் தமிழ் மாவீரர்களின் நாளுமே அதுவாகும் என கனடியப் பராளுமன்றத்தில் இராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்தார். கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா...

புதன், 26 நவம்பர், 2014

தலைவனே பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !

   60 வது அகவை காணும் தலைவனே உலகம் உன் வரவுக்காய் காத்து நிற்கிறது தலைவா! உணர்வுத் தமிழர் துயரம் துடைக்க வா தலைவா! புலம்பெயர் தமிழர் கல்வியை வளமாக்கிய தலைவா! புதியதோர் வழி காட்டு, எமது இன எழுச்சிக்காய் சூரியப் புதல்வரே! தமிழருக்கு சுதந்திரம் பெறவந்த தேவனே! சூரியக் காலத்தில் நாம் ஈழம் பெறுவது உறுதி. உயிர் பிரியும் முன் உங்கள் விழிகளைக் காண்போம்! உறுதி எடுத்துத் தான் நாம் தேசப்பற்றோடு வாழ்கிறோம்! உங்கள் அகவை அறுபது தமிழருக்கு...

வியாழன், 6 நவம்பர், 2014

பிரபாகரன் கடல் உயிரினங்களைப் பாதுகாக்க உதவினார்! –வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார் என்று பிரதான வன தலைமைப் பாதுகாவலரும், தமிழ்நாட்டின் தலைமை வனவாழ் உயிரினங்களின் மேற்பார்வையாளருமான வி.கே.மெல்கானி தெரிவித்துள்ளார். கடலாமைகளைப் பிடித்தலைத் தடுத்தல் மற்றும் மீன்பிடி தொடர்பான நடைமுறைகள் குறித்து, இந்தியக் கடலோரக் காவல்படை, வன, மீன்பிடி, காவல்துறை இளம் அதிகாரிகளுக்கு அளித்த ஒரு...

வியாழன், 4 செப்டம்பர், 2014

விசாரணைகளின் போது இனப்படுகொலை குறித்து விசாரணை செய்யப்படும்

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது. எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு...

திங்கள், 26 மே, 2014

விக்கியின் தீர்மானம் தொடர்பில் பீரிஸ் கவலை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்தமை மிகப் பெரிய தவறாகம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் புது டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார். நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்...

வியாழன், 22 மே, 2014

யுத்தத்தின்போது 18500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்::

இலங்கையில் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் 18,500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில், ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக...

வியாழன், 8 மே, 2014

தமிழர் அமைப்புக்கள் கனடாவில் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் -18 துக்க நாள்

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன. இதனை கடந்த மே-6ம் நாள் செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல்...

வெள்ளி, 2 மே, 2014

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை! அச்சுறுத்தல் :

உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு...

திங்கள், 14 ஏப்ரல், 2014

தமிழ் புதுவருடநல்வாழ்த்துக்கள் .2014ம்

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள். 2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இந்த இணையங்களின் இதயம் கனிந்த சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் “அத்தோடு துன்புறும் எமது தமிழ் உறவுகளை மனதில் கொண்டு அவர்களுக்கு  ஆனந்தமளிப்பதுடன், புதுவருட நாளில் பிற உயிர்களை வதைத்து அவற்றின்...

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

2,000 படையினர் பங்கேற்பு கோபிக்கு எதிரான முன்னெடுப்பில்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது.நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கத...

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தென்னாபிரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிகழ்ச்சி நிரல்கள்!

திர்வரும் 9ம் திகதியன்று தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு அங்கு 10ம் திகதி  முதல் 13ம் திகதி வரை நான்கு நாட்கள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர்களுடனும் ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும்.தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் செல்லும் இக்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன்...

புதன், 26 மார்ச், 2014

புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி:தமிழ் தேசியக்..

அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென...

ஞாயிறு, 23 மார்ச், 2014

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரன் சவால் விடுத்தார். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட நாடகமே நடக்கிறது. வடக்கு மாகாணசபை அமர்வு கொஞ்சம் சூடாகியது. இருப்பினும் அமர்வு தொடர்ந்து களைகட்டவில்லை. அடிக்கடி காரசாரமான விவாதங்களை நடத்தும் சிவாஜிலிங்கம் அவைக்கு நேற்று வராததால் அவை சோபையிழந்தே, வழமை போன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. வடக்கு...

சனி, 22 மார்ச், 2014

சி.வி, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது:

 சி.வி விக்னேஸ்வரன் எமது நிலையை அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே தந்துள்ளது ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடகில் பல்வேறு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மன்னாரில்...

வியாழன், 20 மார்ச், 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது..

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு சிறிலங்கா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரென்சு மொழிபேசும் நாடுகளை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினைத் தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு ஆபிரிக்க நாட்டுத் தலைநகரங்களில் நேரயாகவும் களப்பணியாற்றப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவிலும் இதனை தீவிரப்படுத்தும் பொருட்டு, பிரென்சு மொழி பேசுகின்ற வள அறிஞர்களையும் ஐ.நாவுக்கான தனது வள அறிஞர் குழுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களமிறக்கியுள்ளது. ஏலவே...

புதன், 19 மார்ச், 2014

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை

 எழுச்சியுடன் வரவேற்போம் : சுவிஸ் வாழ் தமிழ் சிங்கள அரசின் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில், லண்டனில் புற்பட்டு ஜெனீவா ஐ.நா முன்றலை எட்டவுள்ள நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை எழுச்சியுடன் வரவேற்க, அணிதிரளுமாறு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வரும் வெள்ளிக்கிழமை (21-03-2014) ஜெனீவா ஐ.நா முன்றலை இந்த நடைப்பயணம் எட்டவுள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத் தொடங்கியிருந்த மார்ச் 3ம்...

ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழ்மக்களின் பிரச்சினையை மனதில் கொண்டே

 அமெரிக்கா பிரேரணையை தமிழ் மக்களாகிய எமது பிரச்சினைகளை மனதில் கொண்டுதான் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே ஜெனிவாவில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ள என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டமைக்கு காரணம் என்ன என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை நிருபர் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர்...

தீர்மானத்தை விமர்சித்து குழப்ப வேண்டாம்

ஐ.நா.தீர்மானத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த...

சனி, 15 மார்ச், 2014

ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா :

  இலங்கைப் படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. இத்தகவலை அனைத்துலக ஊடகங்களான ஏபி( AP) மற்றும் சனல்-4 ஆகியன வெளியிட்டுள்ளன. 14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் இலங்கை படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIRE எனும் அனைத்துலக செய்தி வழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில் அனைத்துலகத்துலக...

வெள்ளி, 14 மார்ச், 2014

பாரிய விரிசல்! ஐ.நாவில் சிங்களவர்களும் போர்க்குற்ற

எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சிங்கள சகோதரர்களும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துகின்றனர். இந்தநிலையில் ஐ.நாவில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம் என ச.வி.கிருபாகரன் தெரிவித்தார். இலங்கை- இந்தியாவிற்கிடையில் பாரிய விரிசல், இது ஐ.நாவில் தாக்கம் செலுத்துவதுடன் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார். நேற்றய...

வியாழன், 13 மார்ச், 2014

சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் :

காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அச்சிறுமியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்தினைக் கோரியுள்ளது. கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா...

புதன், 12 மார்ச், 2014

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! இதனை சர்வதேச

 அமைப்புக்களுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்” நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் ஸ்ரீலங்காவில் 2009 மே மாதம் 19,20ம் திகதிகளில் அரச படையினர் நடாத்திய போர் நடவடிக்கைகளினால் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ள பல சர்வதேச அமைப்புக்கள் அது தமிழ் இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இனஅழிப்பு நடவடிக்கை என்ற வார்த்தையே இடம்பெறவில்லை....

இந்தியாவிற்கு விஜயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தியா அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு...

செவ்வாய், 11 மார்ச், 2014

ஐ.நா சனல்-4 வின் புதிய காணொளி! எதுவும் தெரியாதென்கிறது

 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் காணொளி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் புதிய பேச்சாளரான ஸ்ரிபன்...

திங்கள், 10 மார்ச், 2014

மக்கள் வெள்ளம் ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான **

 இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து பெரிய...

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஐ.நா முன்றிலில் அலையெனத் திரள்வோம் :

நாடுகடநத தமிழீழ தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக விசாரணையினை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர், அனைவரது கவனத்தினையும் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய தமிழர்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜெனீவாவில் வரும் திங்கட்கிழமை (10-03-2014) இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன...

வெள்ளி, 7 மார்ச், 2014

தமிழ் குழுக்கள் ஆஸியிடம் விண்ணப்பம்

இணை அனுசரணை வழங்குமாறு!!! இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றங்களை ஆராய்வதற்கான ஒரு சர்வசே விசாரணையைக் கோரும் அமெரிக்க தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ் குழுக்கள் அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளன என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தீர்மான வரைவு இராணுவ மிகை நடவடிக்கைகள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை...

வியாழன், 6 மார்ச், 2014

லண்டனில் இருந்து புறப்பட்டது ஜெனீவாவினை நோக்கிய

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் லண்டனில் இருந்து புறப்பட்டது. பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை மனுவொன்றினைக் கையளித்தவாறு, பிரித்தானிய பிரதமர் அலுவலக வாயிலில் இருந்து இந்த நடைப்பயணம் புறப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) ,யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா அவர்கள் பொதுமகனாக...

www.nilavarai.com