siruppiddy

புதன், 12 மார்ச், 2014

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! இதனை சர்வதேச


 அமைப்புக்களுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்” நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன்
ஸ்ரீலங்காவில் 2009 மே மாதம் 19,20ம் திகதிகளில் அரச படையினர் நடாத்திய போர் நடவடிக்கைகளினால் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ள பல சர்வதேச அமைப்புக்கள் அது தமிழ் இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இனஅழிப்பு நடவடிக்கை என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமை மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர் தமிழினத்தவர்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு போர் என்பதனை வலியுறுத்த வேண்டும். அதனை வலியுறுத்தும் வகையில் நாம் “சுநஅநனயைட துரளவiஉந கழச வுயஅடைள” (தமிழினத்தவரின் நீதிக்கான திருத்தம்) என்ற நூலினை வெளியிட்டுள்ளோம்”.

கடந்த செவ்வாயன்று மாலை ஸ்காபுறோவிலுள்ள “Pசinஉந டீயஙெரநவ ர்யடட” மண்டபத்தில் நடைபெற்ற ஊடகத்துறையினருக்கான கருத்தரங்கில் காணொளி மூலம் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் இவ்வாறு கூறினார். நாடு கடந்த தமிழீழ அரசின் புலம் பெயர்ந்தோர் விவகார அரமைச்சர் திரு.நிமல் விநாயமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பேராசிரியர் சந்திரகாந்தன் நூலினை
அறிமுகம் செய்து வைத்து இக்கால கட்டத்தில் இத்தகைய நூல் வெளி யிடப்படுவது அத்தியாவசியமெனக் கூறினார்.

பிரதமர் திரு. உருத்திரகுமாரன் தொடர்ந்து உரையாற்றிய போது

“ஐ.நா.வின் நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்த்திரேலிய சட்ட அறிஞர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மாத்திரம் ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடாத்தப் படவேண்டும் என வலியுறுத்த வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பொறுப்பாகும். இதுகுறித்து உள்நாட்டில் ஸ்ரீலங்கா அரசு விசாரணை நடாத்த வேண்டும் என சில அமைப்புக்கள் கோரி வருகின்றன. அர்த்தமற்ற அந்தக் கோரிக்கை ரத்துச் செய்யப்பட வேண்டும். நாம் நமது அரசியல் நடவடிக்கைகளையும் வேலைத் திட்டங்களையும் ஒன்றிணைத்து போராட வேண்டும் எனவும் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்தார்.

என்.எ.பி.கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் திரு.நீதன் சான்,கொன்சவேற்றிப் கட்சியின் முன்னாள் வேட்பாளரான திரு.சான் தயாபரன், திரு.ஈழவேந்தன் ஆகியோரும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். இராப் போசன விருந்துபசாரத்துடன் கூட்டம் நிறைவெய்தியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com