siruppiddy

வெள்ளி, 7 மார்ச், 2014

தமிழ் குழுக்கள் ஆஸியிடம் விண்ணப்பம்

இணை அனுசரணை வழங்குமாறு!!! இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றங்களை ஆராய்வதற்கான ஒரு சர்வசே விசாரணையைக் கோரும் அமெரிக்க தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ் குழுக்கள் அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளன என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தீர்மான வரைவு இராணுவ மிகை நடவடிக்கைகள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் படி கேட்டுள்ளது.
2015 மார்ச்சுக்கு முன்னர் எழுத்து வடிவ அறிக்கையையும் செப்டெம்பரில் வாய் மொழி மூல அறிக்கையையும் சமர்ப்பிக்கும்படி இந்த தீர்மானம்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கேட்கின்றது.
மே 2009 இல் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40000 தமிழ் பொதுமக்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டதாக நம்பகமான விசாரணைகள் சுட்டுகின்றன.
சர்வதேச விசாரணை தேவையில்லாததொரு தலையீடு எனக்கூறிய இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஜீ.வி.பிஷப்பிடம் இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறும் முடியுமாயின் இணை அனுசரணை வழங்குமாறும் கேட்பதற்காக ஒரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கன்பெரா சென்றுள்ளார்
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யூலி பிஷப்புடன் பேசியுள்ளார்;.இவர் இரண்டு பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்தார்.
இலங்கை பொறுப்புக் கூறுதல் விடயத்தில் எதையும் செய்யவில்லை என்பதால் பொதுவான கருத்தொற்றுமை உள்ளது. என சுமந்திரன் அவுஸ்திரேலிய நெட்வேக்குக்கு கூறினார். உள்நாட்டு யுத்தத்தின் போது இறுதிகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் கொடூரங்களை விசாரிக்கும்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளரை கேட்கும் தீர்மானமொன்று தற்போது ஐ.நா மனித உரிமை பேரவையில் உள்ளது.
நாம் ஒரு சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை கேட்டுள்ளோம் நாம் பார்த்த இந்த வரைவு ஒரு தீர்மானமூடாக சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரவில்லை.
நாம் சற்று ஏமாற்றமடைந்துள்ளோம் இருப்பினும் இந்த தீர்மானம் தொடர்பில் முன்னேற்றம் கண்டு வருகிறோம் அமெரிக்கா ,பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகள் இதை முன்னெடுத்து தேவையான விளக்கங்களை பெற்று அது நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமென நாம் நம்பிக்கையோடு உள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மார்ச் 28 இல் இந்த தீர்மானம் தொடர்பாக வாக்களிக்கவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com