siruppiddy

வியாழன், 6 மார்ச், 2014

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது!

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் கிடையாது.எனவே விசாரணை நடத்தப்பட மாட்டாது என ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சாட்சியமும் இல்லாத சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது எவ்வாறு? இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முன்வைக்க நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். எனினும் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த அவரால் முடியவில்லை எனவும், பீரிஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com