siruppiddy

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தலிபான்கள் சதி ஜேர்மன் தூதரகத்தை தாக்க!!


தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் அடிப்படையில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஜேர்மன்
 தூதரகத்தை தாக்கப் போவதாக தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் மார்ட்டின் சாபிர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.

மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்படும் என்றும், ஜேர்மன் மக்களை காப்பாற்றும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com