siruppiddy

சனி, 26 அக்டோபர், 2013

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து விழிப்புணர்வு நடவடிக்கை


சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்து அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதிபூணுவோம் என்ற மக்கள் விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு துண்டப்பிரசுரங்களை வழங்கியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்க்கொண்டனர்.

மேலும், சிறுவர்களது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை பாதிக்கும் அல்லது பாதிப்புக்கு இடமளிக்கும் எந்தவொரு நபரின் செயற்பாடுகள், மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தப்படல், என்பன சிறுவர் துஸ்பிரயோகமாகவே கருதப்படும். இத்தகைய சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 5 வருட கால சிறைதண்டனை வழங்கப்படும் என மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com