siruppiddy

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

 
தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: வைகோ வேண்டுகோள்-
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 14வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து சென்னை அரசு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று பேசிய வைகோ, தியாகுவின் உயிர் இந்த நாட்டுக்கு அவசியம் என்றும், அவர் போராட்டத்தை வேறு வகையில் கையில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

14 நாட்களாக இந்த உண்ணா விரதப் போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர்
மு கருணாநிதிக்கு.


 கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக் கொண்டார்.
இந்தியா முற்றிலும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் வரை வேறுவகையில் போராட்டம் தொடரும் என்று கூறினார் தோழர் தியாகு. தமிழக மக்கள் இனி வெவ்வேறு வகையில் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும் என அவர்  பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.

சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.

இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்

ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவி}ன் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.{ காணொளி




 




 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com