siruppiddy

சனி, 26 அக்டோபர், 2013

பொழிலன் பெரும் தமிழர் கூட்டத்தின் வாழ்த்து முழக்கத்துடன்


 இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை.

இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் 'பணிகள்' முடித்து இந்தியா திரும்பிய போது ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் இவ்வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தார். பத்து ஆண்டுகள் புழல் சிறையில் வாழும்

 தமிழர்களுக்கு தமிழ் தேச சிந்தனையை விதைத்து விட்டு .இந்திய ஆரிய வல்லாதிக்கத்தை தவிடு பொடியாக்கும் உறுதியோடு வெளிவந்தார்...
சாதி மதம் தகர்த்து தமிழ் தேச தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை சிறைக்கு வெளியே நின்ற மக்கள் திரளில் முழங்கினார்...

பொழிலன் தோழரின் குடும்பத்தினரும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து உரையாடியது நெகிழ்வான தருணம்தமிழ் தேச மக்கள் கட்சி தோழர் தமிழ் நேயன் செவ்வேள் பாவேந்தேன் பார்வேந்தன் தமிழ் மகன் தமிழர் நலம் பேரியக்கம் தோழர் மு.களஞ்சியம் வழக்குறைஞர் அங்கயற்கன்னி தாயார் அற்புதம் அம்மாள் வழக்குறைஞர் வடிவாம்பாள் தோழர் அதியமான்

தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் அருண்சோரி கலகத் தோழர்கள் அமலன் கீரா தமிழ்பாலன் முச்தாக் தமிழினியன் மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு தோழருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு புத்தர் கலைக்குழு மகிழினி மணிமாறன் தலைமையில் பறை அடித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தோழர்

மகேந்திரவர்மன் காவலர்களின் நெருக்கடிகளை கோப வார்த்தைகளால் தகர்த்து எறிந்தார் பின் அனைத்து தோழர்களும் பெரும் திரளாக அனுமதி மீறி ஊர்வலமாக வந்து புரட்சியாளர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க மரியாதை செலுத்தினர்.பின் பொழிலன் தோழரை சுமந்து கொண்டு வாகனம் தமிழ்க்களத்தை நோக்கி பயணித்தது

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com