siruppiddy

வெள்ளி, 18 அக்டோபர், 2013

இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற அகதி கைது


மட்டக்களப்பு,கல்லடி ஆராயம்பதியைச் சேர்ந்த சின்னத்துரை சுதாகரன் (வயது33) 2012ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து விசா மூலம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு செல்ல விசாக்காலம் 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்ததால் திரும்பிச் செல்ல முடியாமல் சென்னை காவந்திர அகதி முகாமில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார்.
இலங்கைக்கு படகு மூலம் செல்ல வியாழக்கிழமை காலையில்

இராமேஸ்வரம் தனுஷ்கோடி வந்துள்ளார். இவரை அப்பகுதியில் தமிழக கடலோர காவல் படை குழும காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதிபாஸ் தலைமையில் பொலிஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் இலங்கைக்கு படகுமூலம் செல்ல இருந்தது தெரியவந்ததால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com