இறுதிக் கட்ட போரின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலங்கை அரச இராணுவத்திற்கு உதவியுள்ளனர்.
பிரிட்டனின் PSNI என்னும் வடஅயர்லாந்து பொலிஸ் பிரிவினர் இவ்வாறு உதவியுள்ளனர்.
இறுதிக் கட்ட போரின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானிய இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் 3500 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக