siruppiddy

வியாழன், 31 அக்டோபர், 2013

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம்.


இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகை தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுகள்

எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 13வது அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்த இந்தியா ஆற்றிய சேவைக்காக அந்த கடிதத்தில் விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இலங்கையின் வடக்கு மக்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு இருக்கும் என்று கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னரே விக்னேஸ்வரனின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com