siruppiddy

வியாழன், 5 டிசம்பர், 2013

தலைவருடன் சில மணிப் பொழுதுகள் !!!

 அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும்,...

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக தவராசா?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராசா நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது. நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற கருதப்படுகிறது.     இந்தச்...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினருமான சங்கிலி என்று அழைக்கப்படும் 37 வயதுதுடைய இரத்தினசிங்கம் பரமேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான இவரது சடலம், விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச்...

புதன், 27 நவம்பர், 2013

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர்களின் நினைவாக மரம் நாட்டிய ஐங்கரநேசன்.

மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்ட வேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டது. இந்தபோதும் அவர் மன்னாரில் நேற்று மரங்களை நாட்டினார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த...

சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்

 சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்  தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 59வது அகவை தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில்...

திங்கள், 11 நவம்பர், 2013

தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் மாநாடு:

  தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது. இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட...

வியாழன், 7 நவம்பர், 2013

வெலிஓயா பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை

குடியேற்ற இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் வெலிஓயா முற்றுமுழுதாக சிங்கள மயமாகும் பேராபத்தை நோக்கியுள்ளது என பெயர் குறிப்பிடாத அதிகாரியொருவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில், அனுராதாபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களையும் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் , கருணாட்டுக்கேணி, ஆகிய மூன்று தமிழ் கிராமங்களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது. வன்னி யுத்தத்தின் பின்...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

படப்பிடிப்பு கருவிகள் பறிப்பு; வலி.வடக்கில் இராணுவ..

வலி.வடக்கிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களது படப்பிடிப்புக் கருவிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டதுடன் படங்களும் அழிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை , நகரசபை உறுப்பினர்களும்  நேரடியாக சென்றிருந்தனர். அங்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த...

பிரிட்டன் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது

   இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் எட்மில்லிபாண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையை எட் மில்லிபாண்ட் முன்வைத்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன்,...

சனி, 2 நவம்பர், 2013

கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் -

எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழ தேசியத்துக்காய் தம் உயிர்ஈத்த மாவீரர்களின் மாபெரும் வணக்க நிகழ்வு கனடா ரொறன்ரோவில் இடம்பெறவுள்ளதை அனைத்துலக தமிழ்  உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்...

வியாழன், 31 அக்டோபர், 2013

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகை தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு கடிதம்...

திங்கள், 28 அக்டோபர், 2013

பிரதமருக்கும் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவிக்க திரண்ட தமிழர்கள்..

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள்,  தமது சக கனடிய உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்றம் முன் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் அணிதிரண்ட கனடியத் தமிழர்களின் படத்தொகுப்பு &nbs...

சனி, 26 அக்டோபர், 2013

பொழிலன் பெரும் தமிழர் கூட்டத்தின் வாழ்த்து முழக்கத்துடன்

 இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை. இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் 'பணிகள்' முடித்து இந்தியா திரும்பிய போது ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்...

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து விழிப்புணர்வு நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்து அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதிபூணுவோம் என்ற மக்கள் விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு துண்டப்பிரசுரங்களை வழங்கியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்க்கொண்டனர்.மேலும், சிறுவர்களது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை பாதிக்கும்...

திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகளையும், மக்களையும்

போராளிகள் வருவார்களா? மௌனிக்கிறார். முன்னாள் போராளிகளையும், மக்களையும் காக்க புலம் பெயர் மக்களை அழைக்கும்: செல்வம் பா.உ எமது போராளிகள் வருவார்களா போராட்டம் வெடிக்குமா மௌனத்துடன் தயகத்தில் முன்னால் போராளிகளையும் மக்களையும்  காக்க புலம் பெயர் உறவுகள் இணைவது காலத்தின் கட்டாயம் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலியின் வாராந்த அரசியல் களம்...

ஈழத்தமிழர் வாழ்வின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் 'ராவண தேசம்'

  அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார். இந்த படம் ஈழத்து மக்களது  அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில், போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக...

சனி, 19 அக்டோபர், 2013

நிமலராஜன் மறைந்து 13 வருடங்கள் நிறைவு

  நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி,...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தலிபான்கள் சதி ஜேர்மன் தூதரகத்தை தாக்க!!

தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் அடிப்படையில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஜேர்மன்  தூதரகத்தை தாக்கப் போவதாக தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் மார்ட்டின் சாபிர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் தூதரகமானது...

இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற அகதி கைது

மட்டக்களப்பு,கல்லடி ஆராயம்பதியைச் சேர்ந்த சின்னத்துரை சுதாகரன் (வயது33) 2012ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து விசா மூலம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு செல்ல விசாக்காலம் 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்ததால் திரும்பிச் செல்ல முடியாமல் சென்னை காவந்திர அகதி முகாமில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார். இலங்கைக்கு படகு மூலம் செல்ல வியாழக்கிழமை காலையில் இராமேஸ்வரம்...

புதன், 16 அக்டோபர், 2013

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம்

  ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! - நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் Top News  இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்  பாடுபட்டு தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் தவைவர் பிரபாகரனின் முழு வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவரைப்...

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும் -

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும் இருக்கக்கூடாதென்பதே...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இறுதிக் போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு

  இறுதிக் கட்ட போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலங்கை அரச இராணுவத்திற்கு உதவியுள்ளனர். பிரிட்டனின் PSNI என்னும் வடஅயர்லாந்து பொலிஸ் பிரிவினர் இவ்வாறு உதவியுள்ளனர். இறுதிக் கட்ட போரின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானிய இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2007ம்...

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

  தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: வைகோ வேண்டுகோள்- இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 14வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது...

திங்கள், 14 அக்டோபர், 2013

முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது. வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­  தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை. இதில் மாத இறுதி அமர்வில்...

பீங்கான் கோப்பை: ரூ.110 கோடிக்கு விற்பனை

சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில், 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டின், சாங்க்வா காலத்தில், சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன. பீங்கானால் செய்யப்பட்ட, சிறிய, அழகான, இந்த 'மிங்' கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார். ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய...

www.nilavarai.com